உள்ளூர் செய்திகள்

காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்காவில் நாளை பலத்த பாதுகாப்பு

Published On 2023-01-16 16:00 IST   |   Update On 2023-01-16 16:00:00 IST
  • தடையை மீறி பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம்
  • வணத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

வேலூர்:

வேலூர் அருகே உள்ள அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல்பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப்பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.

காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அமர்தி பூங்கா வளாகப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பூங்காவில் வனத்துறை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். நாளை பூங்கா நுழைவுவாயில் மற்றும் விலங்குகள் கூண்டுகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பூங்காவிற்கு வருபவர்கள் விலங்குகள் பறவைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.மது அருந்தி விட்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேலும் பூங்காவிற்கு மதுபானங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர் மழை காரணமாக அமிர்தி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம்.

ஆற்றிலும் சில இடங்களில் ஆழமான பகுதிகள் உள்ளன.அந்த இடங்களில் தெரியாமல் சென்று குளிக்க வேண்டாம். இதன் மூலம் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக அமிர்தி பூங்காவில் பொழுதை கழித்து செல்லலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News