உள்ளூர் செய்திகள்

புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக கல்வி உதவித்தொகை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். அருகில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார்.

1,961 கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை

Published On 2023-02-08 15:41 IST   |   Update On 2023-02-08 15:41:00 IST
  • புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக வழங்கப்பட்டது
  • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

வேலூர்:

தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இன்று 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காணொளி காட்சி மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கும் 2-வது கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்குவதை அவர் தொடங்கி வைத்தார்.

காட்பாடி ஆக்சிலியம் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 56 கல்லூரிகளில் படிக்கும் 1961 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News