என் மலர்
நீங்கள் தேடியது "Scholarship for female students"
- புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக வழங்கப்பட்டது
- அதிகாரிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இன்று 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காணொளி காட்சி மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கும் 2-வது கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்குவதை அவர் தொடங்கி வைத்தார்.
காட்பாடி ஆக்சிலியம் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 56 கல்லூரிகளில் படிக்கும் 1961 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






