உள்ளூர் செய்திகள்
அடுக்கம்பாறையில் மரக்கன்றுகள் நடும் விழா
- கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு நடந்தது
- வினோத்காந்தி தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதாசீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் தென்போ ஸ்கோ வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் வினோத்காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.