உள்ளூர் செய்திகள்

மணல் லாரி டிரைவர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2023-11-07 09:35 GMT   |   Update On 2023-11-07 09:35 GMT
  • 4 நாட்களாக காத்திருந்ததால் ஆத்திரம்
  • போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

அப்போது மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக அரசு அனுமதி பெற்ற வாகனத்திற்கு மட்டும் மணல் வழங்கப்பட்டு வந்தது.

2-ந்தேதி மணல் வழங்க ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட லாரிகள் தற்போது வரை காத்துக் கொண்டி ருக்கின்றனர்.

கடந்த 4 நாட்களாக காத்திருந்த லாரி டிரைவர்கள் ஆத்திரமடைந்து இன்று மணல் வழங்க வேண்டும் எனக்கூறி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் லாரிகளுக்கு மட்டும் முதலாவதாக மணல் வழங்கு வதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News