உள்ளூர் செய்திகள்

காட்பாடி ஓடை பிள்ளையார் கோவிலில் இருந்து அருப்பு மேடு செல்லும் சாலை சேறும் சக்தி அதிகமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

நடந்து செல்லக்கூட முடியாத சாலைகள்

Published On 2022-10-07 10:25 GMT   |   Update On 2022-10-07 10:25 GMT
  • மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது
  • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் புதைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகர சாலைகள் வெயில் காலங்களில் புழுதியாகவும் மழைக்காலங்களில் சேறும் சகதியமாக காணப்படுகிறது.

காட்பாடி காந்திநகர் மாநகராட்சி அலுவலகம் உள்ள காந்தி நகர், விஜி ராவ் நகர், பாரதி நகர் காந்தி நகர் மற்றும் ஓடை பிள்ளையார் கோவிலில் இருந்து செல்லும் மதிநகர், அருப்புமேடு சாலைகள் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு படு மோசமாக சேறும் சகதியமாக காணப்படுகிறது. ஒரு நாள் மழைக்கு கூட இந்த சாலைகள் தாங்குவதில்லை.

பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News