- திடீரென மாயமானார்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லியை சேர்ந்தவர் உமாபதி (வயது 55). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
இவரது மனைவிகள் இருவரும் பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த நிலையில், கடந்த 7 மாதங் களாக குடியாத்தம் அருகே உள்ள பக்கிரிபல்லியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். மேலும், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இவர் திடீரென மாயமானார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் உமாபதி இறந்த நிலையில் பிணமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உமாபதி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்