உள்ளூர் செய்திகள்

கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-11-25 07:51 GMT   |   Update On 2023-11-25 07:51 GMT
  • வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News