உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2022-12-30 15:44 IST   |   Update On 2022-12-30 15:44:00 IST
  • உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் துர்கா (வயது 17) குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் துர்காவின் தாயார்பத்மா வேலைக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது துர்கா வீட்டில் கூரையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் துர்காவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் துர்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து துர்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News