உள்ளூர் செய்திகள்

வி.ஐ.டி.யில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-01-29 09:38 GMT   |   Update On 2023-01-29 09:38 GMT
  • 3-ந்தேதி நடக்கிறது
  • காலை 10 மணிக்கு தொடங்குகிறது

வேலூர்:

விஐடியில் வேலைவாய்ப்பு துறையும் இயந்திரவியல் துறையும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வி.ஐ.டி. அண்ணா அரங்கத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வளாக நேர்முக தேர்வு நடத்துகிறது.

இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டய படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான ஃபாஸ்ட் சோலார் ,டி.வி.எஸ் வேலியோ, பிரேக்ஸ் இந்தியா , இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் மேலும் பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளவும்.டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717 ல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நேர்முகத் தேர்விற்கு வருவோர்கள் பயோடேட்டா கல்வி சான்றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.

இதில் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு விஐடி வேந்தர் டாக்டர் .கோ விசுவநாதன் கூறினார்.

Tags:    

Similar News