உள்ளூர் செய்திகள்
- மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் தென்னவன் (வயது 62). இவரது மனைவி சுமதி. தென்னவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி சுமதியிடம் மது குடிக்க தென்னவன் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவி பணம் தராததால் மன உளைச்சலில் தென்னவன் காணப்பட்டார்.
பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி சுமதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தென்னவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.