உள்ளூர் செய்திகள்

அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கல்லூரி முதல்வர் பாப்பாத்தி நினைவு பரிசு வழங்கினார். 

மருத்துவ மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டம் வழங்கினார்

Published On 2023-08-21 09:20 GMT   |   Update On 2023-08-21 09:20 GMT
  • அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரியில் விழா நடந்தது
  • குழந்தை கடத்தல் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை

வேலூர்:

அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூர் வந்தார்.

அவருக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாக கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவில் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் பொருத்தினார்.

பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் அறிமுகம் இல்லாத நபர் எப்படி உள்ளே நுழைந்து குழந்தையை கடத்தி சென்றார் என்பது குறித்து குழு அமைத்து டாக்டர்கள், பணியாளர்கள், உள்ளிட்ேடார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலபடுத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News