உள்ளூர் செய்திகள்

உலக நன்மைக்காக மஹா சண்டி யாகம்

Published On 2022-10-09 14:59 IST   |   Update On 2022-10-09 14:59:00 IST
  • தொரப்பாடி சக்தி விநாயகர் கோவிலில் நடந்தது
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர்:

வேலூர் தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் இன்று நடந்தது. சண்டி யாகத்தை ஒட்டி நேற்று காலை கோ பூஜை, கணபதி ஹோமம், கலசஸ்தானம், நவாவண பூஜை மற்றும் 64 பைரவர்கள் 64 மோகினி பழி பூஜை நடந்தது.

மதியம் கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, கவாஷினி, பிரம்மச்சாரி பூஜைகள் நடந்தது. இன்று காலை பவுர்ணமி திதி, உத்திராட்டி நட்சத்திரம் நட்சத்திரத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உலக மக்கள் நன்மைக்காக மங்கள வாத்தியம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத மஹா சண்டி யாகம் நடந்தது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

Tags:    

Similar News