உள்ளூர் செய்திகள்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2023-05-28 13:09 IST   |   Update On 2023-05-28 13:09:00 IST
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
  • தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்

வேலூர்:

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில், வேலூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அந்த வழியாக வந்த லாரியை மடக்கினர்.

இதனைப் பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.

பின்னர் போலீசார் சோதனை செய்தபோது, அதில் திருட்டுத்தனமாக செம்மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.

லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News