உள்ளூர் செய்திகள்
- வாடகை பாக்கி தராததால் நடவடிக்கை
- பணிகள் பாதிப்பு
வேலூர்:
காட்பாடி வள்ளிமலை சாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் லிடியா சரோஜினி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகையில் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்திற்கு மாதம் 2000 ரூபாய் வாடகை. கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இதன் உரிமையாளர் இன்று அலுவலகத்தை பூட்டினார். மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.