உள்ளூர் செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி

Published On 2023-01-25 09:48 GMT   |   Update On 2023-01-25 09:48 GMT
  • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (45) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மேல்மொணவூர் மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக உமாநாத் மீது மோதியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News