- வரதட்சணை கொடுமையால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெருமாங் குப்பம், கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரதாப்.இவரது மனைவி காயத்ரி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பிரதாப் தனது மனைவி காயத்ரியிடம் அவர் வீட்டுக்கு சென்று வரதட்சணையாக நகை, பணம், பைக் வாங்கி வருமாறு தகராறு செய்து வந்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக காயத்திரியின் பெற்றோரால் நகை பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் விரக்தி அடைந்த காயத்ரி நேற்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.