- பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வேலூர்:
காட்பாடியில் உள்ள அன்பு உலகம் தொண்டு நிறுவனம் சார்பில் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அன்பு உலகம் தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் தலைமை தாங்கினார்.
வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சுற்று சூழலின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
முன்னதாக நேற்று முன்தினம் வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வெலாசிட்டி மால் வளாகத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பி.வி.ஆர்.திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் காலை முதல் இரவு வரை மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் அன்பு உலக தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பி.வி.ஆர். திரையரங்க மேலாளர் கலாநிதி, மாறன் அசோசியேட்ஸ் மேலாளர் மணிமாறன் மற்றும் அன்பு உலக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.