உள்ளூர் செய்திகள்

ஓராண்டில் 1,171 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு

Published On 2022-08-29 15:28 IST   |   Update On 2022-08-29 15:28:00 IST
  • வேலூர் கலெக்டர் தகவல்
  • இலக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

வேலூர்:

ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 1,171 விவசா யிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விவ சாயத்துக்கான இலவச மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2001 முதல் மின் இணைப்பு கோரி லட்சக்க ணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தனர்.

இதில், 2001 முதல் 2016-ம்் ஆண்டு வரை பதிவு செய்து காத்திருக்கும் ஒரு லட்சம் விவ சாயிகளுக்கு ஓராண்டுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் மின்வாரியத் தின் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் மாவட் டத்தில் மட்டும் 1,171 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள் ளதாக கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், வேலூர் மாவட்டத்துக்கு அளிக்கப்பட்டிருந்த இலக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News