உள்ளூர் செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் மாணவி ஒருவருக்கு இலவச சைக்கிள் வழங்கினார். அருகில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு.

1,966 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2022-09-05 15:13 IST   |   Update On 2022-09-05 15:13:00 IST
  • அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
  • தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை

வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளை சேர்ந்த 1968 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின் கல்வி இடைநிற்றல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு உதவிகளை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

அதில் ஒரு திட்டம்தான் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்.

மாணவர்கள் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி உயர்கல்வி பயில வேண்டும்.

ஆட்சிகள் மாறினாலும் பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும் அரசு கல்லூரியும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில்:-

ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.

மேட்டூர் உபரி நீர் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது, வாய்ப்பு இருந்தால் பிற மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும்.

தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை அதற்கான இட வசதியோ நீர்வரத்தோ இல்லை என்றார்.

Tags:    

Similar News