வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.29.66 லட்சம் மோசடி
- குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வேலுார்:
காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 16 பேர், வேலுார் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், குடியாத்தம் தாலுகா கமலாபுரத்தைச் சேர்ந்த சாம்ராஜ் (வயது 34) என்பவர் மத்திய, மாநில அரசின் பல்வேறு தொழில் முனைவோர் திட்டங்களின் கீழ் ரூ.50 லட்சம் வரை வங்கிக்கடன் பெற் றுத்தருவதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் கமிஷன் முன்கூட்டியே தரவேண்டும் என தெரிவித்தார்.
அதை நம்பி 16 பேரும் கடந்த ஆண்டில் பல தவணைகளில் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், இதுவரை அவர் வங்கிக் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தவிட்டார். அதன்பேரில், குற்றப் பிரிவு டி.எஸ்.பி சாரதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், வங்கிக்கடன் வாங்கித்த ருவதாக கூறி, சாம்ராஜ் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில், சாம்ராஜ் தலைமறை வானார்.
அவரை குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலை யில், பள்ளி கொண்டாவில் பதுங்கியிருந்த சாம்ராஜை போலீசார் கைது செய்தனர்.