உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

Published On 2023-10-04 09:20 GMT   |   Update On 2023-10-04 09:20 GMT
  • கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

அணைக்கட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பி.டி.ஓ.க்கள் சுதாகரன் சாந்தி முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தாசில்தார் வேண்டா கூறுகையில்:-

உங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News