பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைப்பதில்லை
- குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
- விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
குடியாத்தம் அருகே உள்ள செட்டிகுப்பம் ஏரியிலிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் நிரந்தரமாக கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் 8,500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் மோர்தானா அணை கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு அனுமதி பெற வேண்டும்.அதற்குப் பிறகு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொட ர்ந்து பேசிய விவசாயிகள் 100 நாள் வேலை திட்ட பணியா ளர்களை விவசாய பணிக்கு ஒதுக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் மட்டுமின்றி டவுன் பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்த வேண்டும்.
ஒடுகத்தூ ரில் ஒரு தேசிய வங்கி மட்டுமே உள்ளது இதில் எப்போதும் கூட்டமாக உள்ளது. எனவே ஒடுகத்தூரில் கூடுதலாக தேசிய வங்கி ஒன்று ஏற்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயம் குறித்து வேலூர் மாவட்ட விவசாயி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது குறித்து முறையான பயிற்சி இருந்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.
ஒடுகத்தூர் பகுதியில் மேல் அரசம்பட்டு தீர்த்தம் கொட்டாவூர்ப குதிகளுக்கு அரசு டவுன் பஸ் சரியாக இயக்கப்படு வதில்லை.
பிரதம மந்திரி கிஷான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை கிடைப்பதில்லை. தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ரூ.6000 உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய முறையில் வங்கி கடன் வழங்க வேண்டும்.ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரைவில் திறக்கப்படும் என வாக்குறுதி மட்டுமே தந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே ஆம்பூர் சர்க்கரை ஆலை திறக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டால் கரும்பு பயிரிடாமல் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்வோம். முடிந்த அளவு விரைவில் ஆம்பூர் சர்க்கரை ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரம் மற்றும் தினசரி சந்தை களில் விவசாயிகளிடம் அதிக சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும்.
வனவிலங்குகளை வனத்துறையினரே கட்டுப்படுத்த வேண்டும்.விவசாயிகள் காட்டு பன்றிகளை சுட்டு தள்ள அனுமதி தர வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் போதுமான அளவு யூரியா உள்ளிட்ட உரங்களை இருப்பு வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.