உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் பிடிபட்ட கஞ்சா வியாபாரி.

பிரபல கஞ்சா வியாபாரி கைது

Published On 2022-12-15 09:58 GMT   |   Update On 2022-12-15 09:58 GMT
  • 1¼ கிலோ பறிமுதல்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்ட்டு ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார் அவரது மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று மாலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த குடியாத்தம் தரணம்பேட்டை ஷெரிப் நகர் 2வது தெருவை சேர்ந்த அஸ்லாம் என்கிற இம்ரான் (வயது 25) என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடமிருந்து ¼ கிலோ கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அஸ்ஸலாமை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்தவர் போலீசாரிடம் பிடிபட்ட கஞ்சா வியாபாரி அஸ்லாம் தொடர்ந்து பல வருடங்களாக கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கஞ்சாவுடன் அஸ்லாமை பிடித்தனர்.

அப்போது பிளேடால் உடல் முழுவதும் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி தப்பி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News