உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-03-29 15:13 IST   |   Update On 2023-03-29 15:13:00 IST
  • அரசு ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
  • 496 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது

குடியாத்தம்:

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 52 நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலைவாய்ப்பு கோரி 1200 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 496 பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்ட ன.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். திருமலை வரவேற்றார்.

மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் ஜி.பரமேஸ்வரி ஆகியோர் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். முடிவில் மகளிர் திட்ட குடியாத்தம் வட்டார மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.

இதில் மகளிர் திட்ட பணியாளர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு துறை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News