உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-03 09:38 GMT   |   Update On 2023-03-03 09:38 GMT
  • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வேலூர்:

வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம், ஏரியூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜை கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நவகிரம்பமும் நடந்தது. காலை 9 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.

இதையடுத்து வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க பூஜையில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News