உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் அதிமுகவினர் புகார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் - அ.தி.மு.க.வினர் புகார்

Published On 2022-06-08 15:16 IST   |   Update On 2022-06-08 15:16:00 IST
  • கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
  • ஆர்ப்பாட்டம் செய்வதாக எச்சரிக்கை.

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் அண்ணாதெரு, ஜி.பி.எம்.தெரு, கொசஅண்ணாமலை தெரு, தாடிஅருணாசல தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும் கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கூரை சீட்டுகள் அகற்றப்பட்டது மேலும் கால்வாய் மீது கட்டப்பட்ட இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில் குடியாத்தம் நகர செயலாளர் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.கே.அன்பு, நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, சிட்டிபாபு, லாவண்யாகுமரன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான பி.மேகநாதன் உள்ளிட்டோர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசை சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் ஒரு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாகும் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டினால் விரைவில் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News