உள்ளூர் செய்திகள்
காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம் செய்த காட்சி.
- கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்
- நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர் நாராயணன், ஜெயக்குமார், குப்புசாமி, நிர்வாகிகள் ராகேஷ் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய வேலைவாய்ப்பு கட்டுப்படுத்த திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் தங்களது கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்.