உள்ளூர் செய்திகள்
- பா.ஜ.க. பிரமுகர் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 38) இவர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
இவர் கடந்த 23-ந் தேதி சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) வீடியோ ஒண்றுக்கு கமாண்ட் பன்னி தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் அவரின் குடும்பத்தாரை இழிவு படுத்தி அனுப்பியுள்ளார்.
இதனைப்பார்த்த ஒடுகத்தூர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து வேப்பங்குப்பம் போலீசார் தலைமறைவாக இருந்த விமல்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒடுகத்தூரில் சுற்றி திரிந்த விமல்குமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஒடுகத்தூரில் சர்சையை ஏற்படுத்தியது.