உள்ளூர் செய்திகள்

சென்னை தொழிலாளி திடீர் சாவு

Published On 2023-01-26 09:39 GMT   |   Update On 2023-01-26 09:39 GMT
  • திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பெருமாள் வயது 43 தொழிலாளி. இவருடைய நண்பர் சத்யராஜ் என்பவருடன் வேலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு நேற்று வந்தனர். அப்போது பெருமாள் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News