உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

காட்பாடியில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-08 15:22 IST   |   Update On 2022-11-08 15:22:00 IST
  • 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
  • 1 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து ெசன்றனர்

வேலூர்,

காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் சைக்காலஜி துறை, சமூகப் பணித் துறை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஆக்ஸிலியம் கல்லூரி முதல்வர் ஜெயன்சாந்தி, சமூகப்பணித் துறைத் தலைவர் ஷர்மி அல்தாப், ஊடகத்துறை ராதிகா மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேரணி ஆக்ஸிலியம் கல்லூரியில் இருந்து தொடங்கியது. டான் போஸ்கோ பள்ளி காட்பாடி வழியாக 1 கிலோமீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News