உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்கள்.
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
- போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்
வேலூர்:
குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
திடீரென தனியார் பஸ் பிரேக் பிடித்ததால் அரசு பஸ் தனியார் பஸ் மீது மோதியது. இதில் அரசு பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறானது. தனியார் பஸ்ஸின் பின்பக்கம் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
பஸ்கள் விபத்துக்குள்ளா னதால் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.