உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற அண்ணன்-தம்பி கைது

Published On 2022-12-18 09:10 GMT   |   Update On 2022-12-18 09:10 GMT
  • 800 கிராம் பறிமுதல்
  • வேலூர் ெஜயிலில் அடைப்பு

வேலூர்:

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை சத்துவாச்சாரி வ.உ.சி நகர் மலையடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மலை அடிவாரத்தில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் வ. உ.சி நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான குமார் (வயது25), மணி (24) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News