உள்ளூர் செய்திகள்

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த காட்சி

வேலூரில் புத்தக கண்காட்சி

Published On 2023-11-14 08:09 GMT   |   Update On 2023-11-14 08:09 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடந்தது

வேலூர்:

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணையக் குழு சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று நூலக வார விழா மற்றும் புத்தக கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட நூலக அலுவலரிடம் புத்தக விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உள்ள மாணவர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் பழனி, மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலக கண்கா ணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News