உள்ளூர் செய்திகள்

கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான முதியவர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published On 2023-03-10 09:14 GMT   |   Update On 2023-03-10 09:14 GMT
  • மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர். சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன. இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது.

அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பி உடலை தேடி வந்தனர். சுமார் 500 அடி ஆழம் என்பதால் 3 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சின்னத் தம்பியின் உடல் தானாக மிதந்தது.

அரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News