உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த காட்சி.
- தீ தொண்டு நாளையொட்டி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 10 கிலோ மீட்டர் தொலைவு மாரத்தான் போட்டி நடந்தது.
இதையடுத்து இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.
ஊர்வலத்தை தீயணைப்புத்துறை வடக்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். வேலூர் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தீயணைப்புத் துறையினர் என்சிசி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.