உள்ளூர் செய்திகள்

ஆலமர விழுதை வெட்ட சென்ற முதியவர் மீது தாக்குதல்

Published On 2022-10-25 15:12 IST   |   Update On 2022-10-25 15:12:00 IST
  • 2 பேர் கைது
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த ஓராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 64) அதே ஊரில் இருக்கும் ஆலமரத்தின் விழுதினை பல்துலக்க அறுக்க சென்றுள்ளார்.

இதனைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம் (வயது36) என்பவரும் ஆண்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (வயது31) என்பவரும் முதியவரிடம் சென்று இந்த ஆலமரத்தின் விழுதினை அறுக்க கூடாது, இதில் சாமி இருக்கு என கூறியுள்ளார்கள்.

இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் இரும்பு கம்பியால் முதியவரை தாக்கியுள்ளனர்.

இதனால் தலையில் ரத்தம் கொட்டியது. முதியவரை மீட்ட அப்பகுதி மக்கள் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி முதியவரை தாக்கிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News