உள்ளூர் செய்திகள்

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

Published On 2023-11-16 09:34 GMT   |   Update On 2023-11-16 09:34 GMT
  • பூஜை செய்ய தீபம் ஏற்றியபோது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் கொணவட்டம், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பாப்பம்மாள் (வயது 90). இவர் கடந்த 13-ந் தேதி பூஜை செய்வதற்காக வீட்டில் தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாப்பம்மாள் சேலையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் பாப்பமாளை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News