உள்ளூர் செய்திகள்
- போக்சோவில் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அரிமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 20).
இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணை சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அவர்களை கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் மைனர் பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெங்கடேசன், மைனர் பெண்ணை பாலியில் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மைனர் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.