- கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கர்நாடகா மாநிலம் தும்கூரை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவருக்கு மஞ்சள் காமாலையால் பாதிக்கட்டு அவதியடைந்து வந்தார். வாலாஜாவில் மஞ்சள் காமாலைக்கு மருந்து வழங்கப்படுகிறது.
இதனால் ரவி கர்நாடகாவில் இருந்து வாலாஜாவிற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். அப்போது வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இறங்கினர். பின்னர் பஸ் மூலம் வாலாஜா செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த ரெயில் ரவி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.