மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் சாவு
- நாவல் பழத்துக்கு ஆசைப்பட்டு விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 35) சத்துவாச்சாரி கோர்ட்டில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனா (26) ஒரு வயதில் மகன் உள்ளார்.
சத்துவாச்சாரி டபுள் ரோட்டின் நடுவில் நாவல் பழ மரங்கள் உள்ளன.இந்த மரத்திலிருந்து காற்றில் ஏராளமான பழங்ககள் கீழே விழுந்து கிடக்கின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் ரகுநாதன் ஒரு நாவல் மரத்தில் பழங்களை பறிக்க ஏறினார்.
அப்போது பறித்து வைத்திருந்த பழங்களை பையில் போட்டு வந்தார். பழங்களை பறித்துக் கொண்டிருந்தபோது மழை பெய்ததன் காரணமாக கால் வழுக்கி மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரகுநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாவல் பழம் பறிக்கக சென்று உயிரை மாய்த்த ரகுநாதன் மனைவி மற்றும் குழந்தை தற்போது அவரை இழந்து தவித்து வருகின்றனர்.