உள்ளூர் செய்திகள்

ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

Published On 2023-03-14 14:41 IST   |   Update On 2023-03-14 14:41:00 IST
  • யார்? என தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

வேலூர்:

காட்பாடி அடுத்த சேவூர் ரெயில் நிலையம் அருகே மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாய்ந்தார்.

ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் சேவூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வெள்ளை நிற கட் பனியன் மற்றும் நீல நிற அரைக்கால் டவுசர் அணிந்திருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் யார் எதற்காக ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News