உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு

Published On 2023-06-03 14:42 IST   |   Update On 2023-06-03 14:42:00 IST
  • நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்
  • அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் ஜி.லட்சுமிபிரியா ஆய்வு செய்தார்.

குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, சுண்ணாம்பு பேட்டை பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் தங்கம்நகர் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திடக்கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன்ஜெயக்குமார், உதவி கலெக்டர் (வேளாண்மை) வெங்கடேசன், துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் பானுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் நகர மன்றதலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News