உள்ளூர் செய்திகள்
பழுதாகி நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
- மாணவர்கள் அவதி
- சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர பயணிகள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த வரதலம் பட்டு பகுதியில் இருந்து அப்புக்கல், இளவம்பாடி வழியாக வேலூர் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ் இளவம்பாடி அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது.
இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பஸ் பழுதாகி பாதி வழியிலேயே நின்றது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
அந்த வழியாக வந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சிலர் சென்றனர். நடுவழியில் நின்ற பஸ்சை ஒரு மணி நேரம் பழுது பார்த்து எடுத்துச் சென்றனர்.
இனி இதுபோல சம்பவங்கள் ஏற்படாமல் பஸ் சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.