உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 91 மாணவர்கள் தேர்வு

Published On 2023-02-07 15:09 IST   |   Update On 2023-02-07 15:09:00 IST
  • வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது
  • 142 பேர் பங்கேற்றனர்

வேலூர்:

வேலூர் ஸ்ரீவெங்க டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி துணைத்த லைவர் என்.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

முதல்வர் எம்.ஞானசேகரன் வரவேற்று பேசினார். முகாமை கல்லூரி யின் தலைவர் என்.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில், சென்னை டி.வி.எஸ். பயிற்சி மற்றும் சேவை மனிதவள மேம் பாட்டு சீனியர் அலுவலர் கணேஷ்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை தேர்வு செய்தார்.

முகாமில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் 142 பங்கேற்றனர். மாண வர்களுக்கு முதலில் ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடைபெற் றது. அதில், தேர்வான மாணவர்களுக்கு நேர்முக மற்றும் கலந்தாய்வு தேர்வு நடந்தது. இதில், 91 மாணவர்கள் தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.17,500 சம்பளம் வழங்கப்படும்.

அதைத்தவிர உணவு, மருத்துவ காப் பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.அருண்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News