புத்தாண்டு தினத்தில் ரூ.7 கோடி மது விற்பனை
- மதுபானங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன
- இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கே இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, 'கேக்' வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். மதுபான பிரியர்கள் புத்தாண்டு தினத்தில் மதுபானத்தைக் குடித்து உற்சாகமாக காணப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் நிர்வாகம் வேலூர், அரக்கோணம் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. வேலூர் நிர்வாக மாவட்டத்தில் உள்ள வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 123 கடைகள் உள்ளன.
டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டு தினத்தின்போது மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து வகையான ரம், விஸ்கி, பிராந்தி போன்ற 'ஹாட்' வகைகளும், பீர் வகைகளும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் மது விற்பனை களை கட்டியது. வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகளவில் பீர் மற்றும் ஹார்ட் வகைகள் விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4.28 கொடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
ராணிப்பேட்டையில் ரூ.2.76 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.