உள்ளூர் செய்திகள்

டிரைவரை வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது

Published On 2023-04-14 09:06 GMT   |   Update On 2023-04-14 09:06 GMT
  • போலீசார் விசாரணை
  • தலைமறைவாக உள்ள 3 ேபரை பிடிக்க தீவிரம்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 38).

இவர், அதே பகுதியில் வழக்கறிஞர் கார்த்தி என்பவரின் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

வெட்டுவானம் அம்பேத்கர் நகரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி விஜய் நேற்று காலை காரில் புறப்பட்டார். அப்போது, அவரை வழி மடக்கிய கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஜய், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் விஜய்யை கத்தியால் வெட்டியதாக சுதர்சன், பாரத், சரத்குமார், பழனி, ஜெயபிரகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள சரண்ராஜ், பன்னீர்செல்வம் அவரது மனைவி வடிவழகி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதில் ஏற்பட்ட தகராறில் பன்னீர் தரப்பினர் வழக்கறிஞர் கார்த்தியின் கார் டிரைவரான விஜய்யை கொலை செய்ய முயன்றுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர். இது ெதாடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News