உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் ரூ.3.17 லட்சம் மோசடி

Published On 2022-07-14 14:06 IST   |   Update On 2022-07-14 14:06:00 IST
  • வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என கூறி கைவரிசை
  • போலீசார் விசாரணை

வேலூர்:

காட்பாடி அடுத்த விண்ணப்பள்ளி ஜி ஆர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (வயது 19). இவரது செல்போனுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த லிங்கை அபிஷேக் திறந்த போது வாட்ஸ் அப் மூலமாக பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி பல தவணைகளில் மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 263 ரூபாயை செலுத்தி உள்ளார். அதன் பிறகு குறுஞ்செய்தி வந்த என்னை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தெரிந்தது தான் ஏமாற்றப்பட்டது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் அபிஷேக் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News