என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Employee burnt to death"

    • வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என கூறி கைவரிசை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த விண்ணப்பள்ளி ஜி ஆர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (வயது 19). இவரது செல்போனுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த லிங்கை அபிஷேக் திறந்த போது வாட்ஸ் அப் மூலமாக பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி பல தவணைகளில் மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 263 ரூபாயை செலுத்தி உள்ளார். அதன் பிறகு குறுஞ்செய்தி வந்த என்னை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தெரிந்தது தான் ஏமாற்றப்பட்டது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் அபிஷேக் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊழியர் கருகி பலி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் தர்கா தெருவை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா மகன் சாதிக் பாஷா (வயது 18). இவர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சாதிக் பாஷா ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது ஓட்டலில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதில் சாதிக் பாஷா மீது தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட ஓட்டல் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதிக் பாஷா நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×