என் மலர்
நீங்கள் தேடியது "ஊழியர் கருகி பலி"
- ஊழியர் கருகி பலி
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சேண்பாக்கம் தர்கா தெருவை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா மகன் சாதிக் பாஷா (வயது 18). இவர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சாதிக் பாஷா ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஓட்டலில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதில் சாதிக் பாஷா மீது தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட ஓட்டல் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதிக் பாஷா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






